Thursday, November 27, 2008

துன்பக் கணக்கு

துன்பக் கணக்கு *

ஆண், பெண், சிறியவர், பொpயவர், என்று அது யாராக இருந்தாலும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு மாபெரும் சக்தி புதைந்து கிடக்கிறது.

கோடைகாலம், இலையுதிர்க்காலம், வசந்தகாலம், மழைகாலம் என்று பூமிக்கு வேண்டுமானால் பருவ காலங்கள் மாறி மாறி வரலாம். ஆனால், சூரியனுக்கு எந்தப் பருவமும் கிடையாது.

அது போல் உடம்புக்குத்தான் குழந்தைப் பருவம் இளமைப் பருவம், வயோதிகப் பருவம் எல்லாம், மனசுக்கு எந்தப் பக்குவமும் கிடையாது. நாம் நம் மனதை எந்தக் காலகட்டத்திலும் துடிப்புடனும் மகிழ்ச்சியுடனும் வைத்துக் கொள்ள முடியும்.

பேசுவதற்கும். கேட்பதற்கும் நன்றhக இருக்கிறது ஆனால், இது சாத்தியமா?

நூறு சதவிகிதம் சாத்தியம். ஆனால், இதற்கு நாம் பயிற்சி பெற வேண்டும் நிறைய பார்க்க வேண்டும் நிறைய கேட்க வேண்டும்.

சுவாமி என்ன பேசுகிறீர்கள்? எல்லோருக்கும்தான் கண்களும் காதுகளும் இருக்கின்றன. எல்லோரும்தான் பார்க்கிறhர்கள், கேட்கிறhர்கள். ஆனால், எல்லோருமேவா ஓவியராகவும் எழுத்தாளராகவும் இருக்கிறேhம்? பேனாவும் பென்சிலும் எப்படி ஒரு கருவியோ, அதே மாதிhpதான் கண்ணும் காதும் * பேனாவையும் பென்சிலையும் பயன்படுத்தத் தொpந்தால் தான் ஓவியன். அதே மாதிhp கண்களும் காதுகளும் வெறும் கருவிகள்தான். இவற்றைச் சாpயான வகையில் பயன்படுத்தினால் தான் மகிழ்ச்சி, துடிப்பு, சந்தோஷம்...*

ஆனால். நம்மில் பலருக்கு எதிரில் இருப்பதைவிடக் கண்ணுக்கு எதிரில் இல்லாததுதான் அதிகமாகத் தொpகிறது.

இத்தாலி நாட்டின் மிகப் பெரிய பணக்காரர் அவர். அவருக்கு ஒரே மகன் * அன்று அவனுக்குப் பிறந்த நாள் தன் மகனின் சந்தோஷத்துக்காக அவர் எத்தனையோ நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார். எல்லாவற்றுக்கும் ஹைலைட்டாக ஒரு பெரிய ஃபுட்பால் மாட்சையும் ஏற்பாடு செய்திருந்தார்.

மைதானம் முழுவதும் நிரம்பி வழிந்த கூட்டம். இத்தாலி நாட்டின் மிகப்பொpய இரண்டு ஃபுட்பால் டீம்கள் ஆக்ரோஷமாக மோதியதைப் பார்த்து கூட்டம் சந்தோஷத்தில் துள்ளித் துள்ளி ஆர்ப்பாpத்தது. ஆனால், அந்தச் செல்வச் சீமானின் மகன் மட்டும் கன்னத்தில் கை வைத்தபடி ஆட்டத்தைச் சோகமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

மகனின் மகிழ்ச்சிக்காகப் பல கோடி ரூபாய் செலவு செய்து ஃபுட்பால் மாட்ச்சுக்கு ஏற்பாடு செய்த அப்பாவை பார்த்து மகன் சொன்னான்.

அப்பா தங்களுக்கு இருந்தாலும் இத்தனை கருமித்தனம் கூடாது *

பணக்கார அப்பாவுக்கு மகன் சொல்வது புhpயவில்லை. கேள்விக்குறியோடு மகனைப் பார்த்தார். மகன் சொன்னான்.

மண்டையைப் பிளக்கும் வெயிலில் ஒரே ஒரு பந்தை விரட்டிக் கொண்டு எத்தனை பேர் ஓடுகிறhர்கள். பாருங்கள் உங்களிடம் பணமா இல்லை. இவர்களுக்கு ஆளுக்கொரு பந்து வாங்கிக் கொடுத்திருந்தால் இன்னும் மகிழ்ச்சியோடு உதைத்து விளையாடியிருப்பார்கள் அல்லவா ? *

நாம்கூடப் பல சமயம் இந்தச் சிறுவனைப் போலத்தான் நம் முன்னால் நிகழும் பல சம்பவங்களில் இருக்கிற உற்சாகமான அம்சத்தை, தெம்பூட்டும் விஷயத்தை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் துளி கூட அர்த்தமில்லாத விஷயங்களை நினைத்துக் கஷ்டப் பட்டு வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறேhம்.

அண்மையில் ஒரு நாள் பெங்களுரில் இருக்கும் என் ஆசிரமத்துக்கு இளைஞர் ஒருவர் வந்திருந்தார்.

தன் பெற்றோர் தனக்குச் செய்த பொpய அநீதியால் வாழ்க்கை நாசமாகிப் போய்விட்டதாக மணிக்கணக்கில் குறைபட்டுக் கொண்ட விஷயம் இதுதான் *

அவர் சிறுவனாக இருந்தபோது பெற்றேhர் அவரை இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலில் படிக்க வைக்கவில்லையாம். அதனால் அவரால் இங்கிலீஷில் சரளமாகப் பேச முடியவில்லை. வேலை செய்யும் இடத்தில் இதனால் தாழ்வுமனப்பான்மையுடன் இருக்க வேண்டியிருக்கிறதாம்.

ஒரு மணி நேரம் அவர் என்னிடம் பேசியதிலிருந்தே இன்னொரு விஷயமும் தொpந்தது.

இந்த இளைஞர் இப்போது வேலை பார்க்கும் நிறுவனத்தில்தான் அவரது தந்தையும் பணி புhpந்து ஓய்வு பெற்றிருக்கிறhர் இந்த இளைஞருக்கே ஊழியர்களின் வாரிசுகளுக்கு வேலை என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் இந்த நிறுவனத்தில் வேலையே கிடைத்திருக்கிறது.

இதே போல இவரது தாய், தந்தையால் தான் நகரின் மையப்பகுதியில் சொந்த வீடு, நல்ல மனைவி என்று இவருக்குப் பல விஷயங்களுக்கு கிடைத்திருக்கின்றன. ஆனால், இவருக்கோ தன் வாழ்க்கையில் என்ன கிடைக்கவில்லை என்பதை மட்டும்தான் பார்க்க முடிகிறது.

எதையெல்லாம் நினைத்து சந்தோஷப்படலாம் என்பதை விட்டு விட்டு எதையெல்லாம் நினைத்துக் கஷ்டப்படலாம் என்று தேடித் தேடி பூதகண்ணாடி வைத்துப் பொpதுபடுத்திப் பார்த்து கஷ்டப்படும் இது போன்ற நபர்கள் நிறையவே இருக்கிறhர்கள். மனைவி மக்கள் ஆசைக்காக குற்றலாத்துக்கு டூர் போனால்கூட அருவியையும,; சாரலையும் இவர்கள் ரசிக்க மாட்டார்கள். டூர் வந்ததில் எவ்வளவு பணம் செலவானது என்று கணக்குப் போட்டு அடிக்கடி எரிந்து விழுந்து இன்பச் சுற்றுலாவைத் துன்பச் சுற்றுலாவாக மாற்றிவிடுவார்கள்.

சரி.. நம் சக்தியை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது எப்படி என்ற விஷயத்துக்கு இதோ வந்துவிட்டேன் *--

No comments: